Tuesday 7th of May 2024 07:59:40 PM GMT

LANGUAGE - TAMIL
-
ரொரண்டோ, ஒட்டாவா, பீல் பிராந்தியங்களில்  தொற்று நோய் வீதம் தொடர்ந்து அதிகரிப்பு!

ரொரண்டோ, ஒட்டாவா, பீல் பிராந்தியங்களில் தொற்று நோய் வீதம் தொடர்ந்து அதிகரிப்பு!


கனடா - ஒன்ராறியோ மாகணத்தில் நேற்று வியாழக்கிழமை 409 புதிய கோவிட்-19 தொற்று நோயாளர்கள் பதிவான அதேநேரம் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

புதன்கிழமை 335 புதிய தொற்று நோயாளர்களும் மூன்று இறப்புக் களும் பதிவான நிலையில் நேற்று புதிய தொற்றுக்கள் அதிகரித்துள்ளன. அதேவேளை இறப்பு நேற்று ஒன்றாகக் குறைந்தது.

மாகாணத்தில் ரொராண்டோவிலேயே அதிகளவாக நேற்று 151 புதிய தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர். ஒட்டாவாவில் 82 பேரும் பீல் பிராந்தியத்தில் 46 பேரும் யோர்க் பிராந்தியத்தில் 34 தொற்று நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டனா்.

புதிய தொற்று நோயாளர்களுடன் ஒன்ராறியோவில் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 48,496 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மட்டும் மாகாணத்தில் 30,600-க்கும் மேற்பட்ட கொரோனா சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதேவேளை, நேற்று வியாழக்கிழமை ஒன்ராறியோ முதல்வர் டக் போர்டின் அலுவலகத்தில் பணியாற்றும் ஒருவா் தொற்றுக்குள்ளாகி உறுதிப்படுத்தப்பட்டார். எனினும் பாதிக்கப்பட்ட ஊழியர் முதல்வருடன் தொருங்கிய தொடர்புகளைக் கொண்டிருக்காதவா் என முதல்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கனடா, ஒட்டாவா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE